சிலாங்கூர், பூச்சோங்கிலுள்ள தாமான் புத்ரா பெர்டானாவில் தாமான் லா காட்டேஜ் அருகே முதியவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
பயன்படுத்தப்பட்ட பொருட்களைப் சேகரிக்க தமது வீட்டை விட்டு கிளம்பிச் சென்ற அந்த 67 வயது முதியவர், பின்னர் தமது வாகனத்தின் அருகே கிடந்தது குறித்து பொதுமக்களில் ஒருவர் தகவல் கொடுத்ததாக சிப்பாங் போலீஸ் தலைவர் Assistant Commissioner நூர்ஹிஷாம் பஹாமன் தெரிவித்தார்.
அச்சம்பவத்தில் குற்றச்செயல் அம்சங்கள் ஏதும் இதுவரை கண்டறியப்படவில்லை. அது திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
முதியவரின் சடலம் சவப் பரிசோதனைக்காக செர்டாங் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக நூர்ஹிஷாம் கூறினார்.
அச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள், அருகில் உள்ள போலீஸ் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.








