May 1, 2026
Thisaigal NewsYouTube
ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்
தற்போதைய செய்திகள்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

Share:

வறண்ட காலம் காரணமாக, ரந்தாவ் பாஞ்சாங், சுங்கை கோலோக் எல்லையில், ஏரிகளில் நீர்மட்டம் குறைந்து வருவதால், மலேசிய ஆயுதப் படையான MAF ஒத்துழைப்புடன் பொது செயல்பாட்டுப் படையான GOF, அங்கு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகள் கடத்தப்படுவதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் என்றும், கடத்தல்காரர்கள் தற்போதைய புவியியல் நிலைமைகளைப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யூசோஃப் மாமாட் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கை தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், உளவுத்துறை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், போலீஸ் விமானப் பிரிவு மற்றும் உள்துறை அமைச்சின் இரண்டு ட்ரோன்கள் எல்லையை தினமும் கண்காணிக்கப் பயன்படுத்தப்படுவதாகவும் முகமட் யூசோஃப் தெரிவித்துள்ளார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி