Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பள்ளிவாசலில் மூர்க்கத்தனமாக நடந்துக்கொண்ட வயோதிகப் பெண் கைது
தற்போதைய செய்திகள்

பள்ளிவாசலில் மூர்க்கத்தனமாக நடந்துக்கொண்ட வயோதிகப் பெண் கைது

Share:

பினாங்கு, மார்ச் 19 -

பினாங்கு, ஜோர்ஜ் டவுன், பாத்து பெரிங்கிகிலுள்ள ஜாமேக் ர்.ரஹ்மான் பள்ளிவாசலில் உள்ளே நுழைந்து, அங்குள்ளவர்களிடம் ஆவேசமாக நடந்துக்கொண்ட பெண்ணைப் போலீஸ் கைது செய்துள்ளது.

சம்பந்தப்பட்ட வயோதிக பெண்ணை, அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அருகேயுள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்திருந்த நிலையில், நேற்று தொடங்கி 4 நாட்களுக்கு அவர் விசாரணைக்காக தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளதாக தீமுர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் ராஸ்லாம் அப்துல் ஹாமிட் தெரிவித்தார்.

அந்த வயோதிக பெண்ணுக்கு எதிராக 7 போலீஸ் புகார்கள் பெறப்பட்டிருக்கும் வேளையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகின்றது. அதன் காரணமாக, அவர் மனநல மருத்துவ நிபுணரிடம் கொண்டு செல்லப்படும் வேளை, தற்போதைக்கு விசாரணை தொடர்வதாக, ராஸ்லாம் அப்துல் ஹாமிட் கூறினார்.

சம்பந்தப்பட்ட முதியவர், தங்களிடம் தகறாரில் ஈடுபடுவது இது மூன்றாவது முறையென பள்ளிவாசல் தரப்பு தெரிவித்துள்ளது.

இரவு நேர தொழுகையின் போது, ஒலிப்பெருக்கியின் சத்தம் உறங்கிக்கொண்டிருக்கின்றவர்களுக்கு தொந்தரவை வழங்குவதாக கூறி, அப்பெண் அவ்வாறு நடந்துக்கொள்வதாக, அத்தரப்பு கூறியுள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்