May 22, 2026
Thisaigal NewsYouTube
பள்ளிவாசலில் மூர்க்கத்தனமாக நடந்துக்கொண்ட வயோதிகப் பெண் கைது
தற்போதைய செய்திகள்

பள்ளிவாசலில் மூர்க்கத்தனமாக நடந்துக்கொண்ட வயோதிகப் பெண் கைது

Share:

பினாங்கு, மார்ச் 19 -

பினாங்கு, ஜோர்ஜ் டவுன், பாத்து பெரிங்கிகிலுள்ள ஜாமேக் ர்.ரஹ்மான் பள்ளிவாசலில் உள்ளே நுழைந்து, அங்குள்ளவர்களிடம் ஆவேசமாக நடந்துக்கொண்ட பெண்ணைப் போலீஸ் கைது செய்துள்ளது.

சம்பந்தப்பட்ட வயோதிக பெண்ணை, அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அருகேயுள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்திருந்த நிலையில், நேற்று தொடங்கி 4 நாட்களுக்கு அவர் விசாரணைக்காக தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளதாக தீமுர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் ராஸ்லாம் அப்துல் ஹாமிட் தெரிவித்தார்.

அந்த வயோதிக பெண்ணுக்கு எதிராக 7 போலீஸ் புகார்கள் பெறப்பட்டிருக்கும் வேளையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகின்றது. அதன் காரணமாக, அவர் மனநல மருத்துவ நிபுணரிடம் கொண்டு செல்லப்படும் வேளை, தற்போதைக்கு விசாரணை தொடர்வதாக, ராஸ்லாம் அப்துல் ஹாமிட் கூறினார்.

சம்பந்தப்பட்ட முதியவர், தங்களிடம் தகறாரில் ஈடுபடுவது இது மூன்றாவது முறையென பள்ளிவாசல் தரப்பு தெரிவித்துள்ளது.

இரவு நேர தொழுகையின் போது, ஒலிப்பெருக்கியின் சத்தம் உறங்கிக்கொண்டிருக்கின்றவர்களுக்கு தொந்தரவை வழங்குவதாக கூறி, அப்பெண் அவ்வாறு நடந்துக்கொள்வதாக, அத்தரப்பு கூறியுள்ளது.

Related News

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

29 மலேசியர்கள் உட்பட காசா மனிநேய செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிப்பு - இஸ்தான்புல் நகரை வந்தடைந்தனர்

29 மலேசியர்கள் உட்பட காசா மனிநேய செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிப்பு - இஸ்தான்புல் நகரை வந்தடைந்தனர்