Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு
தற்போதைய செய்திகள்

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

Share:

நாட்டில் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் மற்றும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் ரோஹிஞ்யா அகதிகள் மீது போலீஸ், குடிவரவுத்துறை மற்றும் கோலாலம்பூர் மாநகர மன்றம் ஆகியவை இணைந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.

கோலாலம்பூரில் உள்ள அகதிகளுக்கான ஐ.நா. அலுவலகத்தின் அருகே நூற்றுக்கணக்கான ரோஹிஞ்யாக்கள் சட்டவிரோதமாகக் கூடி போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது குறித்துப் பேசிய அவர், "மலேசியாவிற்கு என்று சட்டதிட்டங்கள் உள்ளன; அகதிகள் எங்கு வேண்டுமானாலும் தங்களின் இஷ்டப்படி குடியேற முடியாது" என்று மிக அழுத்தமாகக் கூறினார்.

மேலும், முறையான ஆவணங்கள் இல்லாதவர்களைக் குடிநுழைவுத்துறை தடுப்புக் காவலில் வைக்கவும், ஆவணங்கள் உள்ளவர்கள் சட்டத்தை மதித்து நடக்குமாறு எச்சரிக்கவும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Related News

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்