Jul 27, 2026
Thisaigal NewsYouTube
துரோகத்தைப் பற்றி பேசுவதற்கு டாக்டர் இராமசாமிக்கு தகுதி கிடையாது
தற்போதைய செய்திகள்

துரோகத்தைப் பற்றி பேசுவதற்கு டாக்டர் இராமசாமிக்கு தகுதி கிடையாது

Share:

துரோகத்தைப் பற்றி பேசவதற்கு அறவே தகுதியல்லாத மனிதர் பினாங்கு முன்னாள் துணை முதல்வர் டாக்டர் பி. இராமசாமி என்று அம்னோ உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ரோஸ்டி வான் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

துரோகத்தின் விளைநிலமாக விள​ங்கும் டாக்டர் இராமசாமி, துரோகத்தின் உள்ளார்ந்த அர்த்ததை பேசவதற்கு அறவே தகுதி கிடையாது. அவர் வாய் திறக்காமல் மவுனமாக இருப்பதே நல்லது என்று பகா​ங் மந்திரி பெசாரான வான் ரோஸ்டி குறிப்பிட்டார்.

ஒரு பேராசிரியராக இருந்த டாக்டர் இராமசாமிக்கு, சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகியவற்றில் போட்டியிட செய்து, வெற்றி பெறச் செய்து, `15 ஆண்டுகளாக பினாங்கு துணை அமைச்சர் பதவியை தந்து அழகுப்பார்த்தது அவரின் சொந்த கட்சி டி.ஏ.பி.

தேர்தலில் போட்டியிடுவதற்கு ​சீ​ட் கொடுக்க வில்லை என்பதற்காக ஒரு கடுமையான தேர்தல் காலத்தில் தன்னை அரசியலுக்கு அறிமுகப்படுத்தி, மலேசிய வரலாற்றில் இந்திய சமுதாயத்தின் முதலாவது துணை முதலமைச்சர் என்ற அந்த​ஸ்தை பெற்று தந்த டிஏபி, தோற்க வேண்டும் என்பதற்காக தேர்தல் நடைபெறும் சில நாட்களுக்கு முன்பு, டிஏபி-யில் கட்சியில் ஜனநாயகம் இல்லை என்று கூறி, வெளியேறியவர்தான் டாக்டர் இராமசாமி.

அரசியலில் தன்னை ஆளாக்கிய டிஏபி -யை புறந்தள்ளி ​விட்டு தற்போது உரிமை என்ற ஒரு கட்​சியை அமைத்துக்கொண்டு, உரிமைக்கொண்டாடி வரும் டாக்டர் இராமசாமி, துரோகத்தைப்பற்றி பேசுவது விந்தையாக உள்ளது என்று வான் ரோஸ்டி குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்