Jul 27, 2026
Thisaigal NewsYouTube
மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் சிறப்புக் கழிவு கட்டணம்; விரைந்து கடனுதவியை செலுத்தும்படி ptptn பெற்றவர்களுக்கு கோரிக்கை
தற்போதைய செய்திகள்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் சிறப்புக் கழிவு கட்டணம்; விரைந்து கடனுதவியை செலுத்தும்படி ptptn பெற்றவர்களுக்கு கோரிக்கை

Share:

கோலாலம்பூர், மார்ச் 19 -

தேசிய உயர்கல்வி நிதி கழகமான PTPTN-னிடம் கடன் பெற்றவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த கழிவு சலுகை, இம்மாதம் மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது.

இந்த குறுகிய காலத்தை சாதகமாகக் பயன்படுத்தி ptptn கல்விக் கடனுதவியைப் பெற்றவர்கள் தங்களின் கடனை விரைந்து செலுத்த வேண்டுமென, அக்கழகம் அறிக்கை ஒன்றில் கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்தாண்டு அக்டோபர் 14ஆம் தேதி தொடங்கி இவ்வாண்டு ஜனவரி 31ஆம் தேதி வரையில், 394 ஆயிரம் பேர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, மொத்தம் 442.09 மில்லியன் ரிங்கிட் தொகையைத் திரும்ப செலுத்தியுள்ளனர்.

அவர்களுக்கு 57.78 மில்லியன் ரிங்கிட் கட்டணக் கழிவு சலுகை வழங்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் போது, ptptn கடனாளிகளுக்கு கடந்தாண்டு அக்டோபர் 14ஆம் தேதி தொடங்கி இம்மாதம் 31ஆம் தேதி வரையில் 3 பிரிவுகளில் கழிவு சலுகையை வழங்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்