Mar 18, 2026
Thisaigal NewsYouTube
மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் சிறப்புக் கழிவு கட்டணம்; விரைந்து கடனுதவியை செலுத்தும்படி ptptn பெற்றவர்களுக்கு கோரிக்கை
தற்போதைய செய்திகள்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் சிறப்புக் கழிவு கட்டணம்; விரைந்து கடனுதவியை செலுத்தும்படி ptptn பெற்றவர்களுக்கு கோரிக்கை

Share:

கோலாலம்பூர், மார்ச் 19 -

தேசிய உயர்கல்வி நிதி கழகமான PTPTN-னிடம் கடன் பெற்றவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த கழிவு சலுகை, இம்மாதம் மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது.

இந்த குறுகிய காலத்தை சாதகமாகக் பயன்படுத்தி ptptn கல்விக் கடனுதவியைப் பெற்றவர்கள் தங்களின் கடனை விரைந்து செலுத்த வேண்டுமென, அக்கழகம் அறிக்கை ஒன்றில் கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்தாண்டு அக்டோபர் 14ஆம் தேதி தொடங்கி இவ்வாண்டு ஜனவரி 31ஆம் தேதி வரையில், 394 ஆயிரம் பேர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, மொத்தம் 442.09 மில்லியன் ரிங்கிட் தொகையைத் திரும்ப செலுத்தியுள்ளனர்.

அவர்களுக்கு 57.78 மில்லியன் ரிங்கிட் கட்டணக் கழிவு சலுகை வழங்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் போது, ptptn கடனாளிகளுக்கு கடந்தாண்டு அக்டோபர் 14ஆம் தேதி தொடங்கி இம்மாதம் 31ஆம் தேதி வரையில் 3 பிரிவுகளில் கழிவு சலுகையை வழங்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை