May 22, 2026
Thisaigal NewsYouTube
மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் சிறப்புக் கழிவு கட்டணம்; விரைந்து கடனுதவியை செலுத்தும்படி ptptn பெற்றவர்களுக்கு கோரிக்கை
தற்போதைய செய்திகள்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் சிறப்புக் கழிவு கட்டணம்; விரைந்து கடனுதவியை செலுத்தும்படி ptptn பெற்றவர்களுக்கு கோரிக்கை

Share:

கோலாலம்பூர், மார்ச் 19 -

தேசிய உயர்கல்வி நிதி கழகமான PTPTN-னிடம் கடன் பெற்றவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த கழிவு சலுகை, இம்மாதம் மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது.

இந்த குறுகிய காலத்தை சாதகமாகக் பயன்படுத்தி ptptn கல்விக் கடனுதவியைப் பெற்றவர்கள் தங்களின் கடனை விரைந்து செலுத்த வேண்டுமென, அக்கழகம் அறிக்கை ஒன்றில் கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்தாண்டு அக்டோபர் 14ஆம் தேதி தொடங்கி இவ்வாண்டு ஜனவரி 31ஆம் தேதி வரையில், 394 ஆயிரம் பேர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, மொத்தம் 442.09 மில்லியன் ரிங்கிட் தொகையைத் திரும்ப செலுத்தியுள்ளனர்.

அவர்களுக்கு 57.78 மில்லியன் ரிங்கிட் கட்டணக் கழிவு சலுகை வழங்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் போது, ptptn கடனாளிகளுக்கு கடந்தாண்டு அக்டோபர் 14ஆம் தேதி தொடங்கி இம்மாதம் 31ஆம் தேதி வரையில் 3 பிரிவுகளில் கழிவு சலுகையை வழங்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

29 மலேசியர்கள் உட்பட காசா மனிநேய செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிப்பு - இஸ்தான்புல் நகரை வந்தடைந்தனர்

29 மலேசியர்கள் உட்பட காசா மனிநேய செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிப்பு - இஸ்தான்புல் நகரை வந்தடைந்தனர்