Mar 20, 2026
Thisaigal NewsYouTube
இரு வெளிநாட்டு பெண்களை கடத்தியதாக தம்பதியர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

இரு வெளிநாட்டு பெண்களை கடத்தியதாக தம்பதியர் மீது குற்றச்சாட்டு

Share:

சிரம்பான், ஏப்ரல் 29-

இரண்டு வெளிநாட்டு பெண்களை கட்டாய தொழிலாளர்களாக வேலை செய்வதற்கு கடத்தியதாக கணவன், மனைவி இருவர் சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டனர்.

33 வயது எஸ். குமரகுரு மற்றும் அவரின் மனைவி 32 வயது தி. அகதீஸ்வரி ஆகியோர் நீதிபதி சுரிதா புடின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு இரண்டு குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 12 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் அத்தம்பதியர் குற்றச்சாட்டப்படுவர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை முதல் அக்டோபர் வரையில் போர்ட்டிக்சன், தாமான் பாயு இந்தேரா லுக்குட்- டில் உள்ள ஒரு வீட்டில் 41 வயது மியான்மார் பெண்ணையும் 21 வயது இந்தியா பெண்ணையும் கட்டாய தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்த கடத்தியதாக அவர்கள் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு மே 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Related News

 பான் போர்னியோ நெடுஞ்சாலையில் கோர விபத்து: மூவர் பலி, இரு சிறுவர்கள் காயம்

பான் போர்னியோ நெடுஞ்சாலையில் கோர விபத்து: மூவர் பலி, இரு சிறுவர்கள் காயம்

இருதய நோயாளி உயிரிழப்பு: மலாயா பல்கலைக்கழக மருத்துவமனை தீவிர விசாரணை

இருதய நோயாளி உயிரிழப்பு: மலாயா பல்கலைக்கழக மருத்துவமனை தீவிர விசாரணை

NKVE நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் துரத்தல்: தேடப்பட்டு வந்த நபர் கைது

NKVE நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் துரத்தல்: தேடப்பட்டு வந்த நபர் கைது

காலத்தால் அழியாத 70-களின் 'ராயா' பாடல்கள்: அதன் மேஜிக் ரகசியத்தைப் பகிர்ந்த டிஜே டேவ்

காலத்தால் அழியாத 70-களின் 'ராயா' பாடல்கள்: அதன் மேஜிக் ரகசியத்தைப் பகிர்ந்த டிஜே டேவ்

மலேசியாவின் மானியமில்லாத எரிபொருள் விலை உயர்வு: உலகளாவிய எண்ணெய் சந்தை மாற்றங்களின் எதிரொலியே - ஆய்வாளர்கள் கருத்து

மலேசியாவின் மானியமில்லாத எரிபொருள் விலை உயர்வு: உலகளாவிய எண்ணெய் சந்தை மாற்றங்களின் எதிரொலியே - ஆய்வாளர்கள் கருத்து

ஷா ஆலாமில் கோலாகலம்: சிலாங்கூர் மாநில அளவிலான உகாதி புத்தாண்டு கொண்டாட்டம்

ஷா ஆலாமில் கோலாகலம்: சிலாங்கூர் மாநில அளவிலான உகாதி புத்தாண்டு கொண்டாட்டம்