சிரம்பான், ஏப்ரல் 29-
இரண்டு வெளிநாட்டு பெண்களை கட்டாய தொழிலாளர்களாக வேலை செய்வதற்கு கடத்தியதாக கணவன், மனைவி இருவர் சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டனர்.
33 வயது எஸ். குமரகுரு மற்றும் அவரின் மனைவி 32 வயது தி. அகதீஸ்வரி ஆகியோர் நீதிபதி சுரிதா புடின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு இரண்டு குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.
குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 12 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் அத்தம்பதியர் குற்றச்சாட்டப்படுவர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை முதல் அக்டோபர் வரையில் போர்ட்டிக்சன், தாமான் பாயு இந்தேரா லுக்குட்- டில் உள்ள ஒரு வீட்டில் 41 வயது மியான்மார் பெண்ணையும் 21 வயது இந்தியா பெண்ணையும் கட்டாய தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்த கடத்தியதாக அவர்கள் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு மே 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.








