Mar 17, 2026
Thisaigal NewsYouTube
திருமணம் ஆகாமலேயே 16,951 பெண்கள் தாய்மை அடைந்துள்ளனர்
தற்போதைய செய்திகள்

திருமணம் ஆகாமலேயே 16,951 பெண்கள் தாய்மை அடைந்துள்ளனர்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.20-

கடந்த நான்கு ஆண்டுகளில் 19 வயதுக்கு கீழ்பட்ட 16 ஆயிரத்து 951 பெண்கள் திருமணம் ஆகாமலேயே தாய்மை அடைந்துள்ளனர் என்று மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ நான்சி ஷுக்ரி தெரிவித்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு வரை சுகாதார அமைச்சு பதிவு செய்துள்ள தரவுகளின்படி இந்த எண்ணிக்கை தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

திருமணம் ஆகாமலேயே பெண்கள் தாய்மையடையும் இப்பிரச்னையைக் களைவதற்கு தமது தலைமையிலான மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் நான்சி ஷுக்ரி இன்று மக்களவையில் தெரிவித்தார்.

இது போன்று பாதிக்கப்படும் பெண்களுக்கு நல்லுரை வழங்குதல், சுகாதாரக் கல்வியை போதித்தல், சமூகத்தின் அரவணைப்பை ஏற்படுத்துதல் முதலிய அணுகுமுறைகளைக் கையாண்டு வருவதாக நான்சி ஷுக்ரி குறிப்பிட்டார்.

Related News

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அருண் துரைசாமி விசாரணை கோரினார்

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அருண் துரைசாமி விசாரணை கோரினார்

3 பேர் உயிரிழப்பு: மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என தெனாகா நேஷனல் எச்சரிக்கை

3 பேர் உயிரிழப்பு: மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என தெனாகா நேஷனல் எச்சரிக்கை

தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்

தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்

பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கில் சம்ரி வினோத் மீது குற்றம்சாட்டப்பட்டது / குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கில் சம்ரி வினோத் மீது குற்றம்சாட்டப்பட்டது / குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

சுங்கை சிப்புட் தோட்டத் தொழிலாளர்களின் நில  விவகாரம் - 27 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வுகாண நடவடிக்கை!

சுங்கை சிப்புட் தோட்டத் தொழிலாளர்களின் நில விவகாரம் - 27 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வுகாண நடவடிக்கை!

பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு / வர்த்தகர் விக்டர் சின்க்குச் சொந்தமான பல இடங்களில் போலீசார் அதிரடிச் சோதனை

பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு / வர்த்தகர் விக்டர் சின்க்குச் சொந்தமான பல இடங்களில் போலீசார் அதிரடிச் சோதனை