தெனாகா நேஷனல் பெர்ஹாட் நிறுவனம், மின்கம்பங்கள், கேபிள்கள் மற்றும் மின்வயர்கள் போன்ற மின்சார அமைப்புகள் மிகுந்த ஆபத்தானவை என்பதால் அவற்றை எவரும் சேதப்படுத்தவோ அல்லது கையாளவோ கூடாது என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இத்தகைய மின்சார அமைப்புகளை சேதப்படுத்துவது சட்டவிரோதமானதோடு என்பதோடு, மின்சாரம் தாக்கும் அபாயமும் உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் யாரும் மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என்றும், சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் தென்பட்டால் உடனடியாக அதிகாரிகளுக்கும் அல்லது TNB-க்கும் தகவல் அளிக்க வேண்டும் என்றும் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், நேற்று ஈப்போ தாமான் ராப்பாட் முத்தியாரா அருகே கேபிள் திருட முயன்ற மூன்று பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு TNB முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








