May 3, 2026
Thisaigal NewsYouTube
தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்
தற்போதைய செய்திகள்

தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்

Share:

தங்காக் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில், கழுத்தில் குத்துக் காயங்களுடன் வெளிநாட்டு பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பொதுமக்களிடமிருந்து நேற்று காலை சுமார் 8.40 மணியளவில் தகவல் கிடைத்ததாக தங்காக் மாவட்ட போலீஸ் தலைவர் ரோஸ்லான் முகமட் தாலிப் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் உடலில் கழுத்துப் பகுதியில் காயங்கள் காணப்பட்டதாகவும், உடல் மூவார் உள்ள சுல்தானா பாத்திமா சிறப்பு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு வெளிநாட்டு பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண... | Thisaigal News