போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இருவர் அந்த தண்டனையிலிருந்து இன்று தப்பினர். எனினும் தூக்குத் தண்டனைக்கு பதிலாக அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
37 வயது சௌ கும் யுவன் என்பவருக்கு 18 ஆண்டு சிறை மற்றும் 20 பிரம்படித் தண்டனை மற்றும் 31 வயது எஸ். இந்திரனுக்கு 12 ஆண்டு சிறை மற்றும் 10 பிரம்படித் தண்டனை விதிப்பதற்கு புத்ரா, ஜெயா கூட்டரசு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.
அவர்கள் கடத்திய போதைப்பொருள் அளவு குறைக்கப்பட்டு, குற்றச்சாட்டில் திருத்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தூக்குத் தண்டனைக்கு பதிலாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

Related News

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு


