Jan 18, 2026
Thisaigal NewsYouTube
பத்தாண்டு காலமாக ஏமாற்றி வந்த நபர் பிடிப்பட்டார்
தற்போதைய செய்திகள்

பத்தாண்டு காலமாக ஏமாற்றி வந்த நபர் பிடிப்பட்டார்

Share:

உடல் ஊனமுற்ற தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய மாதாந்திர அலவன்ஸ் உதவித்தொகையைப் பெறுவதற்குப் போலி சம்பள சூராவைப் பயன்படுத்தி கடந்த பத்தாண்டு காலமாக ஏமாற்றி வந்த நபரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான sprm கைது செய்துள்ளது.
39 வயதுடைய அந்த நபர் நேற்று பிற்பகல் 12 மணியளவில் சிரம்பானில் உள்ள sprm அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆணைத்தின் தகவல்கள் கூறுகின்றன.


சம்பந்தப்பட்ட நபர், உயர்ந்த சம்பளத்தைக் கொண்டிருப்பதால் அரசாங்கத்தின் உதவித் தொகையைப் பெறுவதற்கு அவர் தகுதி பெறவில்லை. இதன் காரணமாக அவர், குறைந்த சம்பளத்தைப் பெறுவதைப் போன்று போலியாக தயாரிக்கப்பட்ட சம்பள சூராவைப் பயன்படுத்தி, கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து, உடல் ஊனமுற்ற தொழிலாளர்களுக்கான மாதாந்திர அலவன்ஸ் தொகையைப் பெற்று ஏமாற்றி வந்ததாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு ஏதுவாக அந்த நபரை, 5 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்க seremban majistret நீதிமன்றம், sprm மிற்கு இன்று அனுமதி அளித்தது.

Related News

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!

நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதம் அவசியம்: அரசு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பிரதமர் அன்வார் அறிவுரை!

நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதம் அவசியம்: அரசு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பிரதமர் அன்வார் அறிவுரை!

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

பத்தாண்டு காலமாக ஏமாற்றி வந்த நபர் பிடிப்பட்டார் | Thisaigal News