அம்பாங், மார்ச்.10-
எதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என்று உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிஸான் முஹமட் அலி உறுதியளித்துள்ளார். மேற்காசிய நாடுகளில் நிலவும் பதற்றமான சூழலால் விநியோகம் பாதிக்கப்படாது என்பதைக் உறுதிப்படுத்தியுள்ள அவர், பொதுமக்கள் அச்சமடைந்து பொருட்களைக் குவித்து வைக்கத் தேவையில்லை என்று கேட்டுக் கொண்டார்.
மேலும், மார்ச் 14 முதல் 28-ஆம் தேதி வரை 15 நாட்களுக்குப் பெருநாள் கால விலைக் கட்டுப்பாட்டுத் திட்டம் அமல்படுத்தப்படும் என்றும், இதன் மூலம் காய்கறிகள் உள்ளிட்ட முக்கியப் பொருட்களின் விலை சீராக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.








