Mar 19, 2026
Thisaigal NewsYouTube
அடுத்த ஆண்டு சேவையைத் தொடங்கும்
தற்போதைய செய்திகள்

அடுத்த ஆண்டு சேவையைத் தொடங்கும்

Share:

சரவாக், ஏப்ரல் 11 -

சரவா மாநில அரசாங்கத்திற்கு சொந்தமான விமான நிறுவனம், அடுத்த ஆண்டு முற்பகுதியில் வானில் தனது சிறகை விரிக்கும் என்று மாநில முதலமைச்சர் ஆபாங் ஜோஹாரி ஆபாங் ஓபேங் இன்று அறிவித்துள்ளார்.

மலேசிய விமான நிறுவனத்தின் துணை நிறுவனமான விளங்கிய Maswings Sdn. Bhd. விமான நிறுவனத்தை தனது உடமையாக்கிக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்கு மலேசிய வான் போக்குவரத்து ஆணையமான MAVCOM ( மாவ்கோம்), போக்குவரத்து அமைச்சு மற்றும் மலேசிய வான்போக்குவரத்து குழுமம் ஆகியவை கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஆபாங் ஜோஹாரி தெரிவித்தார்.

இன்று கூச்சிங்கில், போர்னியோ மாநாட்டு மையத்தில் நோன்புப்பெருநாள் பொது உபசரிப்பை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்விவரத்தை வெளியிட்டார்.

Related News