Mar 20, 2026
Thisaigal NewsYouTube
பெர்லிஸ் ராஜாவை அவமதித்ததாக வியாபாரி மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பெர்லிஸ் ராஜாவை அவமதித்ததாக வியாபாரி மீது குற்றச்சாட்டு

Share:

கங்கார், ஏப்ரல் 16-

பெர்லிஸ் ராஜாவை குறித்து அவதூறான கருத்துக்களை முகநூல் அகப்பக்கத்தில் வெளியிட்டதாக நண்டு வியாபாரி ஒருவர் கங்கார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

குற்றச்சாட்டப்பட்ட 41 வயது ஹஸ்புல்லா முகமது என்கிற அந்த வியாபாரி, நீதிபதி முசிறி பீட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 50,000 வெள்ளி அபராதம் அல்லது ஓர் ஆண்டு சிறை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 233 (1) (a) மற்றும் 233(3) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டப்படுவார்.

கடந்த மார்ச் 6 ஆம் தேதி விடியற்காலை 3.26 மணியளவில் அந்த வியாபாரி நோக்கத்துடன் பெர்லிஸ் ராஜாவை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை முகநூல் அகப்பக்கத்தில் வெளியிட்டதாக அவ்வாடவர் குற்றச்சாட்டப்பட்டுள்ளார்.

Related News