May 22, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்ததாக இருவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

போலீஸ் அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்ததாக இருவர் மீது குற்றச்சாட்டு

Share:

மலாக்கா, ஏப்ரல் 16-

மூத்த காவல்துறை அதிகாரிக்கு 60,000 வெள்ளி லஞ்சம் கொடுத்து காரியத்தை சாதித்ததாக இரு நபர்கள் அயர் கெரோஹ் செசியன் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டனர்.

குற்றச்சாட்டப்பட்டுள்ள 26 வயது டியோ டெக் கிங் மற்றும் 19 வயது கியோங் கா வை ஆகிய இருவரும் நீதிபதி எலசபெட் பாயா வான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சட்டம் 2009 - யின் 17(6) மற்றும் 24 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் அவ்விருவரும் குற்றச்சாட்டப்படுவர்.

மோசடி நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் தங்களின் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்கு கடந்த ஆண்டு, மலாக்கா தெங்கா மாவட்ட காவல் அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி ஒருவருக்கு 60,000 வெள்ளி லஞ்சம் கொடுத்ததாக அவ்விருவரும் குற்றச்சாட்டப்பட்டுள்ளனர்.

Related News

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி