Jul 28, 2026
Thisaigal NewsYouTube
அன்வார் மீதான திறமையில் நம்பிக்கையை இழந்து விட்டனர் மக்கள்
தற்போதைய செய்திகள்

அன்வார் மீதான திறமையில் நம்பிக்கையை இழந்து விட்டனர் மக்கள்

Share:

கோலாலம்பூர், மார்ச் 5 -

மக்களவையில் முகைதீன் யாசின் பகிரங்க குற்றச்சாட்டு

நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் திறமையில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின், இன்று நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார்.

மலேசியர்களுக்கு தற்போது ரிங்கிட்டின் மீது நம்பிக்கை இல்லை. இந்த வட்டாரத்தில் உள்ள நாணயங்களுடன் ஒப்பிடுகையில் மலேசிய ரிங்கிட் மதிப்பு தொடர்ந்து வலுவிழந்து வருவதே இதற்கான காரணமாகும் என்று பாகோ எம்.பி.யான முகைதீன் குறிப்பிட்டார்.

அந்நிய நாணயங்களை சேமிப்பதை மக்கள் தங்களின் தேர்வாக கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு ஜுலை மாத வரையிலான தரவுகள்படி நாட்டின் வங்கிகளில் 25 ஆயிரம் கோடி வெள்ளி மதிப்பிலான அந்நிய நாணயங்கள் வைப்புத்தொகையாக முதலீடு செய்யப்பட்டுள்ளன.

தாம் பிரதமராக இருந்த காலகட்டத்தில் வங்கிகளின் வைப்புத்தொகையாக முதலீடு செய்யப்பட்ட 15 ஆயிரம் கோடி வெள்ளியாக இருந்த அந்நிய நாணய மதிப்புடன் ஒப்பிடுகையில் தற்போது 25 ஆயிரம் கோடி வெள்ளியாக உயர்ந்துள்ளது. மலேசிய வரலாற்றில் வங்கிகளில் இந்த அளவிற்கு அந்நிய நாணயங்கள் சேமிப்பாக மக்கள் குவித்து வைத்து இருப்பது இதுவே முதல் முறையாகும் என்று டான்ஸ்ரீ முகைதீன் தெரிவித்தார்.

தனது சொந்த நாட்டு நாணயத்தைவிட அந்நிய நாணயங்கள் மீது மக்கள் ஏன் இந்த அளவிற்கு நம்பிக்கையும், மோகமும் கொண்டுள்ளனர் என்பது ஆராயப்பட வேண்டிய முக்கிய கேள்வியாகும் என்று முகைதீன் குறிப்பிட்டார்.

தம்மை கேட்டால் இதற்கு விடை சுலபமாகும். நாட்டின் பொருளாதாரத்தை நல்ல முறையில் நிர்வகிக்கும் ஆற்றலையும், திறனையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கொண்டிருக்கவில்லை என்பதே இதற்கான விடையாகும் என்று டான்ஸ்ரீ முகைதீன் மக்களவையில் வாதிட்டார்.

Related News

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்