Jun 6, 2026
Thisaigal NewsYouTube
மலையேற்ற வீரர் மாயம்: வழிகாட்டிகள் மீது பழி சுமத்த வேண்டாம் என மீட்கப்பட்டவர் கோரிக்கை
தற்போதைய செய்திகள்

மலையேற்ற வீரர் மாயம்: வழிகாட்டிகள் மீது பழி சுமத்த வேண்டாம் என மீட்கப்பட்டவர் கோரிக்கை

Share:

ஈப்போ, குனோங் பத்து புத்தே பகுதியில் மாயமான பெண் மலையேற்ற வீரர் ஜஸ்லிந்தா தேடப்பட்டு வரும் வேளையில், இந்தச் சம்பவத்திற்காக வனத்துறை மலை வழிகாட்டிகள் மீது பழி சுமத்த வேண்டாம் என அவருடன் சென்று மீட்கப்பட்ட முகமது ஹனாபி கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த மே 23 ஆம் தேதி 14 பேர் கொண்ட குழுவினர் இப்பயணத்தைத் தொடங்கினர். வழியில் ஹனாபிக்கு நெஞ்சுவலி மற்றும் வாந்தி ஏற்பட்டதால், அவரும், ஜஸ்லிந்தாவும், வழிகாட்டியான அபிஸ் என்பவரும் ஒரு முகாமில் தங்க நேரிட்டது. அவசர உதவிக்காகத் தொலைத்தொடர்பு சிக்னல் தேடி வழிகாட்டி அபிஸ் மலை உச்சிக்குச் சென்றபோது, ஜஸ்லிந்தாவை அங்கேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால், ஜஸ்லிந்தா அங்கிருந்து மாயமாகியுள்ளார்.

மோசமான வானிலைக்கு மத்தியிலும், வழிகாட்டி அபிஸ் தங்களைக் காப்பாற்றத் தொடர்ந்து போராடினார் என்றும், எனவே இதில் வழிகாட்டிகளின் தவறு ஏதுமில்லை என்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஹனாபி தெரிவித்துள்ளார்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு