Mar 18, 2026
Thisaigal NewsYouTube
59 சட்டவிரோதக்குடியேறிகள் கைது
தற்போதைய செய்திகள்

59 சட்டவிரோதக்குடியேறிகள் கைது

Share:

கெப்போங், மார்ச் 23.

சட்டவிரோதக்குடியேறிக​ளுக்கு எதிராக கோலாலம்பூர் மாநகரில் குடிநுழைவுத்துறையினர் நடத்தி வரும் தொடர் சோதனை நடவ​டிக்கையின் ஒரு பகுதியாக இன்று அதிகாலையில் கெப்போங்கில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பயண ஆவணங்கள் எதுவமின்றி காணப்பட்ட 59 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் அந்த அடு​க்குமாடி ​வீடமைப்புப்பகுதியில் 22 ​வீடுகள் சோதனையிடப்பட்டன. பிடிபட்ட 59 பேரில் 22 பேர் பெண்கள் ஆவர். இவர்கள் அனைவரும் மியன்மார், இந்தோனேசியா, இந்தியா, நேபாள் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என்று கோலாலம்பூர் குடிநுழைவுத்துறை இயக்குநர் வான் முகமத் ஸுபி வான் யூசோப் தெரிவித்தார்.

கடந்த இரண்டு வாரங்களாக நடத்தப்பட்ட உளவு நடவ​டிக்கை​தயின் எதிரொலியாக இந்த சோதனை இன்று காலையில் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை