நாட்டில் 2023 முதல் இதுவரை 148.21 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 1,576 முடங்கிய மற்றும் கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் வெற்றிகரமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பாதிக்கப்பட்ட 1.88 லட்சத்திற்கும் அதிகமான வீடு வாங்குபவர்கள் பயனடைந்துள்ளனர். 2030-ஆம் ஆண்டிற்குள் நாட்டில் கைவிடப்பட்ட வீட்டுத் திட்டங்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவதே அரசின் இலக்கு என்றும் ங்கா கோர் மிங் குறிப்பிட்டார்.
இதன் ஒரு பகுதியாக, பெருந்தொற்று மற்றும் நிதி நெருக்கடியால் முடங்கியிருந்த 1.5 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள புகழ்பெற்ற 'எம்101 ஸ்கைவீல்' திட்டம், தற்போது 'கேஎல்360' என்ற பெயரில் புதிய நிறுவனத்தால் வெற்றிகரமாக மீட்டெடுக்கப்பட்டு அதன் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் விளக்கினார்.








