காணாமல் போய் 14 நாட்களுக்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை ஜாஸ்லிண்டா சாலுதின் , காட்டில் தான் சந்தித்த துயரங்கள் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார்.
அவர் மீட்கப்பட்ட கிராமத்து வீட்டில் வைத்து எடுக்கப்பட்ட ஒரு சமூக வலைத்தள வீடியோவில், "நான் காட்டில் பலமுறை கீழே விழுந்து அடிபட்டேன்; குறிப்பாக இரவு நேரங்களில் உயிர் பிழைப்பதற்காகக் கடுமையான போராட்டங்களைச் சந்தித்தேன்" என்று தனது தவிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.








