Mar 28, 2026
Thisaigal NewsYouTube
580 முறை இரத்த தானம் செய்து 'மெடல் ஃபோர் லைஃப்' விருதைப் பெற்ற முதல் பெண்மணி
தற்போதைய செய்திகள்

580 முறை இரத்த தானம் செய்து 'மெடல் ஃபோர் லைஃப்' விருதைப் பெற்ற முதல் பெண்மணி

Share:

கோலாலம்பூர், ஜூன்.14-

580 முறை இரத்த தானம் செய்து மெடல் ஃபோர் லைஃப் எனும் வாழ்நாள் பதக்கத்தைப் பெற்ற நாட்டின் முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றுள்ளார் 65 வயது சின் ஜெக் லெங். தனது தாயாருக்கு O+ வகை இரத்தம் தேவைப்பட்டதால், அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட இரத்த இழப்பை ஈடுகட்ட பற்றாக்குறையை எதிர்கொண்ட சின் ஜெக் லெங், அதன் பிறகு தீவிர இரத்த தானம் செய்பவராக மாறினார்.

தனது தாய்க்கு ஏற்பட்டது போல் மீண்டும் நிகழாமல் இருக்க, ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தேசிய இரத்த மையத்திற்குச் சென்று இரத்த தானம் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார் இவர். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக இரத்த தானம் செய்து வரும் இவர், இதுவரை 580 முறை இரத்த தானம் செய்துள்ளார். இந்த அசாதாரண சாதனைக்காக, மெடல் ஃபோர் லைஃப் எனும் வாழ்நாள் பதக்கத்தைப் பெற்ற நாட்டின் முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை