Jul 6, 2026
Thisaigal NewsYouTube
மகாதீரின் கருத்திற்கு சரவாக் தலைவர் அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்ஸா கடும் கண்டனம்
தற்போதைய செய்திகள்

மகாதீரின் கருத்திற்கு சரவாக் தலைவர் அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்ஸா கடும் கண்டனம்

Share:

எதிர்வரும் தேர்தல்களில் மலாய்க்காரர்கள் மலாய் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறிய கருத்திற்கு, சரவாக் மாநில தலைவர்களில் ஒருவரான அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்ஸா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பார்த்தி பெசாகா பூமிபுத்ரா பெர்சத்து கட்சியின் தகவல் பிரிவுத் தலைவரான அவர், 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை வழிநடத்திய மகாதீர், பல்லின மக்கள் ஒன்றிணைந்து வாழும் மலேசியாவின் சமூக அமைப்பை நன்கு அறிந்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மகாதீர் கூறிய கருத்து, மலேசிய மக்களிடையே பிளவை ஏற்படுத்தக்கூடும் என்றும், குறிப்பாக மகாதீர் போன்ற மூத்த தலைவரிடமிருந்து இப்படிப்பட்ட கருத்துகள் வருவது மிகவும் பொறுப்பற்ற செயல் என்றும் கரீம் ரஹ்மான் ஹம்ஸா குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், இனம் மற்றும் மதவாத அரசியலைத் தவிர்த்தால் தான் நல்லிணக்கம், அமைதி, வளம் மற்றும் முன்னேற்றம் கொண்ட மலேசியாவை உருவாக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related News

மலேசியாவின் எதிர்கால வெற்றிக்கு மனிதவளத் தரமே முக்கியம் – துணைப் பிரதமர் வலியுறுத்து

மலேசியாவின் எதிர்கால வெற்றிக்கு மனிதவளத் தரமே முக்கியம் – துணைப் பிரதமர் வலியுறுத்து

54 நிறுவனங்களிடமிருந்து எந்த நிதி பலனும் பெறவில்லை – ஜனா விபாவா வழக்கில் தெங்கு ஸஃப்ருல் சாட்சி

54 நிறுவனங்களிடமிருந்து எந்த நிதி பலனும் பெறவில்லை – ஜனா விபாவா வழக்கில் தெங்கு ஸஃப்ருல் சாட்சி

வழிப்பாட்டுத்தலம் அருகே பயங்கர தாக்குதல் – ஒருவர் கவலைக்கிடம்; 5 பேர் கைது

வழிப்பாட்டுத்தலம் அருகே பயங்கர தாக்குதல் – ஒருவர் கவலைக்கிடம்; 5 பேர் கைது

மலாக்காவில் இடி தாக்கி கால்பந்து வீரர் ஆர்.தணேஷ் உயிரிழப்பு - நடுவர் காயம்

மலாக்காவில் இடி தாக்கி கால்பந்து வீரர் ஆர்.தணேஷ் உயிரிழப்பு - நடுவர் காயம்

ஜோகூரில் மலிவு விலை வீடுகள் அமைப்பதில் தாமதம் ஏன்? - மாநில அரசை சாடிய அன்வார்

ஜோகூரில் மலிவு விலை வீடுகள் அமைப்பதில் தாமதம் ஏன்? - மாநில அரசை சாடிய அன்வார்

போதைப் பொருட்களால் சீரழியும் இளைய தலைமுறை: நாடெங்கிலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அடிமையாகியுள்ளதாக ஏஏடிகே கவலை

போதைப் பொருட்களால் சீரழியும் இளைய தலைமுறை: நாடெங்கிலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அடிமையாகியுள்ளதாக ஏஏடிகே கவலை