Jul 6, 2026
Thisaigal NewsYouTube
மலாக்காவில் இடி தாக்கி கால்பந்து வீரர் ஆர்.தணேஷ் உயிரிழப்பு - நடுவர் காயம்
தற்போதைய செய்திகள்

மலாக்காவில் இடி தாக்கி கால்பந்து வீரர் ஆர்.தணேஷ் உயிரிழப்பு - நடுவர் காயம்

Share:

மலாக்காவில் நேற்று மாலை நடைபெற்ற நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியின் போது, மின்னல் தாக்கியதில் விளையாட்டாளர் ஒருவர் உயிரிழந்ததுடன், போட்டி நடுவரும் காயமடைந்தார்.

உயிரிழந்தவர் 28 வயதான ஆர். தணேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று மாலை சுமார் 5.40 மணியளவில் 'லெண்டு ராகன் மூடா வளாகம்' கால்பந்து மைதானத்தில் இந்தச் சம்பவமானது நிகழ்ந்ததாக அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மத் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.

ரெம்பாவ் இந்தியன் வெட்டரன் எஃப்சி மற்றும் தஞ்சோங் மின்யாக் எஃப்சி அணிகளுக்கு இடையிலான நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி தொடங்கி சுமார் 10 நிமிடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கிய நேரத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இடி முழங்கிய உடனேயே வீரர் ஆர். தணேஷ் மற்றும் மேலும் இருவர் மைதானத்திலேயே மயங்கி விழுந்ததை அவரது சக வீரர்கள் கண்டதாகவும் அஹ்மத் அபு பக்கர் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Related News

மலேசியாவின் எதிர்கால வெற்றிக்கு மனிதவளத் தரமே முக்கியம் – துணைப் பிரதமர் வலியுறுத்து

மலேசியாவின் எதிர்கால வெற்றிக்கு மனிதவளத் தரமே முக்கியம் – துணைப் பிரதமர் வலியுறுத்து

54 நிறுவனங்களிடமிருந்து எந்த நிதி பலனும் பெறவில்லை – ஜனா விபாவா வழக்கில் தெங்கு ஸஃப்ருல் சாட்சி

54 நிறுவனங்களிடமிருந்து எந்த நிதி பலனும் பெறவில்லை – ஜனா விபாவா வழக்கில் தெங்கு ஸஃப்ருல் சாட்சி

வழிப்பாட்டுத்தலம் அருகே பயங்கர தாக்குதல் – ஒருவர் கவலைக்கிடம்; 5 பேர் கைது

வழிப்பாட்டுத்தலம் அருகே பயங்கர தாக்குதல் – ஒருவர் கவலைக்கிடம்; 5 பேர் கைது

ஜோகூரில் மலிவு விலை வீடுகள் அமைப்பதில் தாமதம் ஏன்? - மாநில அரசை சாடிய அன்வார்

ஜோகூரில் மலிவு விலை வீடுகள் அமைப்பதில் தாமதம் ஏன்? - மாநில அரசை சாடிய அன்வார்

மகாதீரின் கருத்திற்கு சரவாக் தலைவர் அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்ஸா கடும் கண்டனம்

மகாதீரின் கருத்திற்கு சரவாக் தலைவர் அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்ஸா கடும் கண்டனம்

போதைப் பொருட்களால் சீரழியும் இளைய தலைமுறை: நாடெங்கிலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அடிமையாகியுள்ளதாக ஏஏடிகே கவலை

போதைப் பொருட்களால் சீரழியும் இளைய தலைமுறை: நாடெங்கிலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அடிமையாகியுள்ளதாக ஏஏடிகே கவலை