May 22, 2026
Thisaigal NewsYouTube
இன்று முதல் டோல் கட்டணம் இலவசம்
தற்போதைய செய்திகள்

இன்று முதல் டோல் கட்டணம் இலவசம்

Share:

சிலாங்கூர், மார்ச் 11 -

சிலாங்கூர் பந்திங்கையும், பேரா தைப்பிங்கையும் இணைக்கும் WCE எனப்படும் மேற்கு கரையோர நெடுஞ்சாலையின் ஒரு பகுதியான தைப்பிங் செலத்தானுக்கும், பெருவாஸ் ஸிற்கும் இடையிலான நெடுஞ்சாலை இன்று பின்னிரவு திறக்கப்படுகிறது. பின்னிரவு முதல் வரும் மே 11 ஆம் தேதி ரை டோல் கட்டணம் இலவசம் என்று போக்குரத்து அமைச்சர் டத்துக் ஶ்ரீ அலெக்சன்டர் னந்தா லிங்கி தெரிவித்தார்.

தைப்பிங் செலத்தான், த்ரோங் மற்றும்பெருவாஸ் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும் இந்த நெடுஞ்சாலையில் அனைத்து வகையான வாகனங்களுக்கும் டோல் கட்டணம் இலவசம் என்று அமைச்சர் குறிப்பட்டுள்ளார்.

42 கோடியே 20 லட்சம் வெள்ளி செலவிலான இந்த நெடுஞ்சாலையின் தைப்பிங் செலத்தான் பகுதியில் மே 11 ஆம் தேதி வரை இலவச டோல் கட்டணத்திற்கு West Coast Expressway Sdn. Bhd. நிறுவனம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பட்டுள்ளார்.

Related News