தனது வாட்சப் கணக்கில் ஊடுருவல் நடந்து இருப்பதாக முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் போலீசில் புகார் செய்துள்ளார்.
பொறுப்பற்ற நபர்களால் இன்று மதியம் இந்த ஊடுருவல் நடந்து இருப்பதாக பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவருமான முகைதீன் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று பிற்பகல் 12 மணிக்கு பிறகு தனது வாட்சப் தளத்திலிருந்து பகிரப்படும் தகவல்களை பொருட்படுத்த வேண்டாம் என்று பொது மக்களை முகைதீன் கேட்டுக்கொண்டுள்ளார்.








