Mar 17, 2026
Thisaigal NewsYouTube
STH ICT Consultant இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா
தற்போதைய செய்திகள்

STH ICT Consultant இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா

Share:

2022/2023 ஆம் ஆண்டு STH ICT Consultant பட்டமளிப்பு விழா அதன் தலைவர் திலகவதி பாலசந்திரன் முன்னிலையில் கோலாலம்பூர், மலாயா பல்கலைக்கழகத்தில் நேற்று சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட இவ்வகுப்பு, சிறுவயது முதல் மாணவர்கள் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் அறிவாற்றலுடன் வளர வேண்டும் என்பதற்காக பாட நேரத்திற்கு அப்பாற்பட்டு மேற்கொள்ளப்படுவதுடன் 3000 –க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது இதில் பயின்று வருகின்றனர்.

இரண்டாவது ஆண்டாக நடைபெறும் இந்த பட்டமளிப்பு விழாவிற்கு STH ICT Consultant- வின் நிர்வாக இயக்குநர் சசிகுமார் ராமா, STH ICT Consultant –வின் CEO சாந்தி அர்ஜுதன், மலேசிய தலைமையாசிரியர் மன்ற தலைவர் SS பாண்டியன், Asia Pacific University – வின் CEO Gurpardeep, EWRF –வின் தலைவர் Govinda, டத்தோ Vignaesvaran Jeyandran மற்றும் நிகழ்விற்கு முத்தாய்ப்பிக்கும் வகையில் சிறப்பு பிரமுகராக Batu எம்.பி P. பிரபாகரன் ஆகியோர் வருகை புரிந்திருந்தனர்.

நாடு தழுவிய அளவில் 6 மாநிலங்களில் உள்ள 32 ஆரம்ப தமிழ்ப்பள்ளிகளில் இந்த STH ICT Consultant வகுப்பு நடத்தி வருவதுடன் 23 தமிழ்ப்பள்ளிகளிலிருந்து 180 மாணவர்கள் 3 வருட வகுப்பினை முழுமையாக பூர்த்தி செய்து நேற்று பட்டம் பெற்றனர்.

Asia Pacific University of Technology and Innovation மற்றும் Juba Academy – வுடன் ஒன்றிணைந்து நிகழ்த்தப்படும் இந்த ICT வகுப்பு மாணவர்களுக்கு ஒரு தரமான சான்றிதழை வழங்குவது மட்டுமல்லாமல் தமிழ் மாணவர்கள் தகவல், தொழில்நுட்பத்தில் சிறந்திட செய்வதே இதன் நோக்கமாகும் என்று திலகவதி தெரிவித்தார்.

வளர்ந்து வரும் மாணவர்களுக்கு தகவல், தொழில்நுட்பம் பிரதான ஒன்றே. இதுபோன்ற வகுப்புகளுக்கு பெற்றோர்கள் நிச்சயம் தங்களின் பிள்ளைகளை அனுப்ப வேண்டும் என்று பிரபாகரன் கேட்டுக் கொண்டார்.

வகுப்பு நேரத்திற்கு அப்பாற்பட்டு நடத்தப்படும் இந்த ICT வகுப்பில் மாணவர்கள் பல புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதுடன் நிறுத்திவிடாமல் எதிர்காலத்திற்கும் நன்மை தருகின்றது என்று திசைகளுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் சில மாணவர்கள் கூறியிருந்தனர்.

பிள்ளைகளை ஊக்குவிக்கும் வகையில் பட்டம் பெற்ற மாணவர்களின் பெற்றோர்களும் நிகழ்வில் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தது மட்டுமல்லாமல் பூங்கொத்து வழங்கி புகைப்படம் எடுத்து கொண்டு நிகழ்வினை மெருகூட்டினர்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

STH ICT Consultant இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா | Thisaigal News