Jul 27, 2026
Thisaigal NewsYouTube
துப்பாக்கிகளுடன் பிடிபட்ட இஸ்ரேலிய பிரஜை குற்றத்தை மறுத்தார்
தற்போதைய செய்திகள்

துப்பாக்கிகளுடன் பிடிபட்ட இஸ்ரேலிய பிரஜை குற்றத்தை மறுத்தார்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 12-

ஆறு துப்பாக்கிகள் மற்றும் 158 தோட்டாக்களுடன் பிடிபட்ட ஓர் இஸ்ரேலிய பிரஜை, இன்று காலை 9:30 மணியளவில் கோலாலம்பூர், சேசியேன் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டார்.

நீதிபதி தஸ்னிம் அபு பக்கர் முன்னிலையில், பிரான்ஸ் கடப்பிதழைக் கொண்டுள்ள அந்த ஆடவருக்கு எதிராக மொழிப்பெயர்ப்பாளர் ஆங்கிலத்தில் குற்றச்சாட்டை வாசித்த போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் மார்ச் 28ஆம் தேதி வரையில் ஜாலான் அம்பாங்கிலுள்ள Four Seasons ஹோட்டலில் 38 வயது ஆவிதான் ஷலோம் என்கிற அவ்வாடவர் துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் வைத்திருந்ததாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டது.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் 1971 ஆம் ஆண்டு சுடும் ஆயுதங்கள் சட்டம், 7 ஆவது பிரிவின் கீழ் அவ்வாடவர் குற்றஞ்சாட்டப்படுவார். இதனிடையே, சம்பந்தப்பட்ட ஆடவருக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிபதி, அவ்வழக்கின் மறு செவிமடுப்பை மே 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

இதற்கு முன்பு, இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மேலும் 14 பேர் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அந்நபர்கள் தடுப்புகாவலில் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் நேற்று கூறியிருந்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்