Jul 27, 2026
Thisaigal NewsYouTube
கோல குபு பாரு இடைத்தேர்தலில் டிஏபி-யின் பெரும்பான்மை சரியும்!
தற்போதைய செய்திகள்

கோல குபு பாரு இடைத்தேர்தலில் டிஏபி-யின் பெரும்பான்மை சரியும்!

Share:

ஷாஹ் அலாம், ஏப்ரல் 22-

சிலாங்கூர், கோல குபு பாரு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், டிஏபி கட்சி பலத்த சவாலை எதிர்நோக்க வேண்டியிருந்தாலும், அது தொகுதியைத் தக்கவைத்துக்கொள்ளும்.

கடந்தாண்டு நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தலில், அத்தொகுதி பெற்றிருந்த 4 ஆயிரத்து 119 பெரும்பான்மை வாக்குகளில், இவ்வாண்டு குறைந்தது ஆயிரம் வாக்குகளாவது குறையும் என மாநில டிஏபி பொருளாளர் ஓங் கியான் மிங் கணித்துள்ளார்.

தற்போது உள்ள அரசியல் சூழல், பக்காத்தான் ஹாராப்பானுக்கு சாதகமாக இல்லை. தேர்தல் பரப்புரையை சரியான வியூகத்துடன் கொண்டு சென்றால் மட்டுமே, குறுகிய பெரும்பான்மையில் டிஏபி கட்சி வெற்றி பெற வாய்ப்புள்ளது என்றாரவர்.

டிஏபி-யின் பெரும்பான்மை வாக்குகள் சரிவிற்கு பல காரணங்கள் உள்ளன. கழக சீர்த்திருத்தங்களில் தாமதம், நாட்டின் பொருளாதாரம் மந்தமாக இருப்பதாக கூறப்படும் கருத்துகள், வாழ்க்கை செலவின அதிகரிப்பு என ஒற்றுமை அரசாங்கத்தின் பலவீனங்களைக் காரணங்களாக கூறிவிட முடியாது.

கடந்த சில வாரங்களாக, அல்லா சொல் கொண்ட காலுறை விற்பனை விவகாரத்தில், பக்காத்தான் ஹாராப்பான்- தேசிய முன்னணி தலைவர்களிடையே ஏற்பட்டிருந்த கருத்து மோதல்கள், மலாய்காரர் அல்லாதவர்களிடையே கடும் அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ளது.

அதன் விளைவாக, வரக்கூடிய கோல குபு பாரு இடைத்தேர்தலில், வாக்களிக்க செல்லவிருக்கும் மலாய் அல்லாத வாக்காளர்களின் எண்ணிக்கை பெருமளவில் சரிவதற்கான வாய்ப்பு உள்ளதாக, ஓங் கியான் மிங் ஆருடத்தை வெளிப்படுத்தினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்