தெரெங்கானு, கோலா தெரெங்கானு, ஜாலான் புடிமான்-னிலுள்ள இடைநிலைப்பள்ளி ஒன்றின் முன்புற சாலையில் நிகழ்ந்த கோர விபத்தில், 18 வயதுடைய இளைஞரின் இடது கால் துண்டானது.
நேற்று மாலை மணி 7.16 வாக்கில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், மோட்டார்சைக்கிளில் வந்திருந்த முகமது ஆதம் முக்லிஸ் அப்துல் அஜீஸ் எனும் இளைஞர் பலத்த காயங்களுக்கு இலக்கானதாக, கோலா தெரெங்கானு, உதவி ஆணையர் அஸ்லி முகமது நூர் தெரிவித்தார்.
சாலையின் இடது ஓரத்திலிருந்து, டொயோட்டா ஹிலக்ஸ் ரக வாகன ஓட்டுநர் புடிமான் சமிக்ஞையை நோக்கி யூ-டர்ன் செய்த போது, ஹோண்டா EX5 மோட்டார்சைக்கிளில் வந்த இளைஞர் அந்த வாகனத்தை மோதியது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடும் காயங்களுக்கு இலக்கான அந்த இளைஞர் பின்னர், மேல்கட்ட சிகிச்சைக்காக சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக, அஸ்லி முகமது நூர் கூறினார்.








