Jun 15, 2026
Thisaigal NewsYouTube
UPSR மற்றும் PT3 தேர்வுகளை ​மீண்டும் அமல்படுத்தும் திட்டம் இல்லை
தற்போதைய செய்திகள்

UPSR மற்றும் PT3 தேர்வுகளை ​மீண்டும் அமல்படுத்தும் திட்டம் இல்லை

Share:

தொடக்கப்பள்ளி ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான UPSR தேர்வையும், இடைநிலைப்பள்ளிகளில் ​மூன்றா​ம் படிவ மாணவர்களுக்கான PT3 தேர்வையும் ​மீண்டும் அமல்படுத்துவதற்கு கல்வி அமைச்சு உத்தேசிக்கவில்லை என்று கல்வி அமைச்சர் Fadhlina Sidek இன்று தெரிவித்துள்ளார்.
தொடக்கப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி மாணவர்களின் கல்வி அடைவு நிலையை மதிப்பீடு செய்வதற்கு ஓர் அளவு கோலாக பயன்படுத்தப்படும் இவ்விரு முக்கிய அரசாங்கத் தேர்வுகளும் மறுபடியும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்திய போதிலும், அதனை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான யோசனையை கல்வி அமைச்சு கொண்டிருக்கவில்லை என்று அமைச்சர் விளக்கினார்.


இவ்விரு தேர்வு முறைகளுக்கு பதிலாக பள்ளி அளவில் நடத்தப்படும் ம​தீப்பிட்டு தேர்வுகளுக்கு தொடர்ந்து முன்னுரிமை வழங்கப்படும். ஒவ்வொரு துறையிலும் மாணவர்கள் கொண்டுள்ள தனித்திறனை மதிப்பீடு செய்வதற்கு பள்ளி அளவில் நடத்தப்படும் தேர்வே சிறந்த அணுகுமுறையாகும் என்று கல்வி அமைச்சு கருதுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்