Mar 20, 2026
Thisaigal NewsYouTube
ஐந்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான தடுப்புக்காவல் நீட்டிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

ஐந்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான தடுப்புக்காவல் நீட்டிக்கப்படும்

Share:

12 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி ரொக்கப்பணம் கேட்டு மிரட்டியதாக நம்பப்படும் 5 உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான தடுப்புக்காவல் நீட்டிக்கப்படும் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

38 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஐந்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு எதிராக கடந்த சனிக்கிழமை பெறப்பட்ட நான்கு நாள் தடுப்புக்காவல் அனுமதி, நாளை செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைகிறது.

விசாரணையை தொடர்வதற்கு ஏதுவாக அந்த ஐந்து உயர் போலீஸ் அதிகாரிகளும் நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தடுப்புக்காவலுக்கான அனுமதி பெறப்படும் என்று டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் குறிப்பிட்டார்.

தவிர இச்சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு உயர் போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இத்துடன் கைது செய்யப்பட்ட போலீஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு கண்டுள்ளது என்று ஐஜிபி தெரிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து