12 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி ரொக்கப்பணம் கேட்டு மிரட்டியதாக நம்பப்படும் 5 உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான தடுப்புக்காவல் நீட்டிக்கப்படும் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
38 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஐந்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு எதிராக கடந்த சனிக்கிழமை பெறப்பட்ட நான்கு நாள் தடுப்புக்காவல் அனுமதி, நாளை செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைகிறது.
விசாரணையை தொடர்வதற்கு ஏதுவாக அந்த ஐந்து உயர் போலீஸ் அதிகாரிகளும் நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தடுப்புக்காவலுக்கான அனுமதி பெறப்படும் என்று டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் குறிப்பிட்டார்.
தவிர இச்சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு உயர் போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இத்துடன் கைது செய்யப்பட்ட போலீஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு கண்டுள்ளது என்று ஐஜிபி தெரிவித்தார்.








