Mar 21, 2026
Thisaigal NewsYouTube
உயரிய விருதை வென்றார் மலேசிய மாணவர்
தற்போதைய செய்திகள்

உயரிய விருதை வென்றார் மலேசிய மாணவர்

Share:

ஹார்வர்ட், மே 23-

அமெரிக்காவில் ஹார்வர்ட் சட்டக்கல்லூரியில் சட்டத்துறைக்கான முனைவர் பட்டப்படிப்பு மாணவரான மலேசியாவைச் சேர்ந்த அர்ஜுன் கணநாதன், 2024 ஆம் ஆண்டுக்கான Ralph D. Gants Access to Justice விருதை வென்றுள்ளார்.

நீதி மற்றும் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒரு மாணவனை அங்கீகரிக்கும் வகையில் அமெரிக்காவில் இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது.

அமெரிக்காவின் உச்சநீதிமன்ற நீதிபதியான மறைந்த மாசசூசெட்ஸ் மற்றும் சமூக நீதிக்கான வழக்கறிஞரான ரால்ப் டி. ஜெண்ட்ஸ் ஆகியோரை கெளரவிப்பதற்காக அவர்களின் பெயரில் இந்த விருது கடந்த 2021 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

ஹார்வர்ட் சட்டக்கல்லுரியில் இந்த உயரிய விருது பெறுவதை ஒரு வரப்பிரசாதமாக கருதுவதாக 24 வயதுடைய மலேசிய மாணவன் அர்ஜுண் தெரிவித்தார். சட்டத்துறையில் குறிப்பாக வசதி குறைந்த தனது கட்சிக்காரர்களுக்கு நீதி கிடைப்பதற்காக போராடி வரும்
அர்ஜுணின் சமூகவியல் பங்களிப்பை கருத்தில் கொண்டு அவருக்கு இந்த மதிப்புமிகுந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

எந்தவொரு வழக்கிலும் சிக்கலான பிரச்னைகளை இரு பக்கங்களில் அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவதில் அர்ஜுண் மிகப்பெரிய அறிவு ஜீவி என்று புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து