May 22, 2026
Thisaigal NewsYouTube
பென்த்தொங்-கில் சுற்றுலா பேருந்து சாலையில் குடை சாய்ந்ததில் 16 பேர் படுகாயம்
தற்போதைய செய்திகள்

பென்த்தொங்-கில் சுற்றுலா பேருந்து சாலையில் குடை சாய்ந்ததில் 16 பேர் படுகாயம்

Share:

காராக், மார்ச் 29-

காராக் பென்த்தொங் நெடுஞ்சாலையில் புக்கிட் திங்கி, லென்தாங்-கை நோக்கி செல்லும் சாலையின் 51.4ஆவது கிலோமீட்டரில் சுற்றுலா பேருந்து ஒன்று சாலையில் குடை சாய்ந்ததில் அதில் பயணித்த 16 பேர் காயமடைந்தனர்.

அவர்களில் 12 உள்நாட்டவர்கள்; எஞ்சிய நால்வர் வெளிநாட்டினராவர்.

லென்தாங் ஓய்வுதளத்திற்கு அருகில் குடை சாய்ந்த ஹினோ வகையான அந்த பேருந்து, சம்பவத்தின் போது, கிழக்கை நோக்கி சென்றுக்கொண்டிருந்ததாக நம்பப்படுகின்றது.

அதில், சிக்கிக்கொண்ட ஒரு பெண் வெற்றிகரமாக மீட்கப்பட்ட வேளையில் ஒரு பெண் உட்பட மேலும் நால்வர் தீயணைப்பு மீட்பு படையின் அவசர மருத்துவ மீட்பு சேவையின் வழி, பென்த்தொங் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

தகவல் பெற்றதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பென்த்தொங் தீயணைப்பு மீட்பு படையினர், காயமடைந்த அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு