நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பு தோற்றுவிக்கப்பட்டுள்ள தாய்மொழிப்பள்ளிகள், கல்விச் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக செயல்பட்டு வந்த போதிலும் தாய்மொழிப்பள்ளிகளின் தோற்றம் மற்றும் அதன் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையில் இல்லாததைத் போல் இருக்கும் பாஸ் கட்சியின் நடவடிக்கை குறித்து டிஏபி பிரச்சாரப் பிரிவுத் தலைவர் தியோ நி சிங் கேள்வி எழுப்பினார்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் தாய்மொழிப்பள்ளிகள் விவகாரம் ஏன் சர்ச்சையாக்கப்படுகிறது என்பது குறித்து தமக்கு விளங்கவில்லை என்று தொடர்புத்துறை துணை அமைச்சருமான தியோ நி சிங் குறிப்பிட்டார்.
தாய்மொழிப்பள்ளிகள் இன்னமும் பெற்றோரின் முதன்மை தேர்வாக இருப்பதை புரிந்துக்கொள்ள முடியாத நிலையில் இருக்கும் பாஸ் கட்சிக்காக தாம் அனுதாபப்படுவதாக தியோ நி சிங் தெரிவித்தார்.
வரும் மே 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் தாய்மொழிப்பள்ளிகள் விவகாரத்தை சர்ச்சையாக்கி வரும் பாஸ் கட்சியின் நடவடிக்கை குறித்து எதிர்வினையாற்றுகையில் தியோ நி சிங் மேற்கண்டவாறு கூறினார்.
பாஸ் கட்சியை சேர்ந்த சில தலைவர்கள், தங்கள் பிள்ளைகளை சீன மொழிப்பள்ளிப் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர் என்ற எதார்த்தமான உண்மையை அந்த மதவாத கட்சி ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்றும் தியோ நி சிங் கேட்டுக்கொண்டார்.








