டுங்ஙுன்,ஜன.30
பத்து ரக்கிட், கம்போஸ் டத்தோ ரசாலி இஸ்மாயில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியைச் சேர்ந்த 64 மாணவர்களை ஏற்றி வந்த பஸ், டுங்குன் கம்போங் ஜொங்கோக் பத்து அருகே இன்று நண்பகல் 12.30 மணி அளவில் கவிழ்ந்தது.
வெள்ளத்திற்குப் பிறகான உதவிகளைச் செய்ய சென்று கொண்டிருந்த அனைவரும் ஆபத்து ஏதும் இன்றி காப்பாற்றப்பட்டனர்.
புக்கிட் பெசி சட்டமன்ற உறுப்பினர் கசாலி சுலைமான் கூறுகையில், பேருந்து ஓட்டுநர் ஒரு குறுகிய மாற்று சாலையைப் பயன்படுத்தி இருக்கிறார், அப்பாதையை வழிகாட்டும் செயலி காட்டி இருக்கிறது அதன்படி சென்றதால் இந்தக் குறுகலானப் பாதையில் பஸ்ஸை செலுத்தி இருக்கிறார் என கஸாலி தெரிவித்தார்.
சேறும் சகதியுமான பாதையில் பஸ் செலுத்தப்பட்டதால், அது கவிழ்ந்தடு எனவும் அவர் சொன்னார்.

Related News

ஈப்போவில் கேபிள் திருட்டில் ஈடுபட்ட மூவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

இணையத்தில் உலாவும் போலி தொலைப்பேசி எண்களை நம்ப வேண்டாம் - ஏர் ஏசியா எச்சரிக்கை

ஜம்ரி மீது இன்று குற்றம் சாட்டப்படவில்லை

பொருட்கள் கையிருப்பு போதுமான அளவில் உள்ளது - FAMA

15 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் சாலை வரியைப் புதுப்பிக்கவில்லை


