ஜொகூர் பாரு, மே 29-
ஜோகூர் ரீஜண்ட் ( REGENT ) துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம்-மின் உடன் செல்லும் எஸ்கார்ட் மெய்க்காவலர்களில் ஒருவர், நேற்று கோலாலம்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மாற்றுத் திறனாளி ஒருவரைத் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் Datuk செரி முஹம்மது ஷுஹைலி முகமது ஜைன் தெரிவித்துள்ளார்.
குற்றவியல் சட்டம் 323 ஆவது பிரிவின் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டு தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஷுஹைலி ஜைன் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை. அந்த மாற்றுத் திறனாளி ஏன் தாக்கப்ப்டடார் என்பதற்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை என்று ஷுஹைலி ஜைன் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து புகார் அளித்த மாற்றுத் திறனாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறாரா? என்று கேட்ட போது அது குறித்து கருத்துரைக்க ஷுஹைலி ஜைன் மறுத்து விட்டார்.








