சிலாங்கூரில் பன்றிப் பண்ணை செயல்பாடுகளை முழுமையாக நிறுத்த வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை மேன்மை தங்கிய சிலாங்கூர் மாநில சுல்தான் சுல்தான் ஷராபுதீன் இத்ரிஸ் ஷா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து சுல்தானின் தனிச்செயலாளர் முனிர் பானி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பன்றிப் பண்ணைகளால் ஏற்படும் கழிவுகள், நதிகளை மாசுபடுத்துவதுடன், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதுகிறது என சுல்தான் கருதுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பன்றிப் பண்ணைகள் நீர்ப்பிடிப்பு பகுதிகளையும் நதிகளையும் பாதிக்கக்கூடும் என்றும், அவை சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா பகுதிகளில் வசிக்கும் சுமார் 90 இலட்சம் மக்களின் நீர்வழங்கலுக்கு முக்கிய ஆதாரமாக உள்ளதாகவும் சுல்தான் கவலை தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், தரநிலைகளுடன் கூடிய நவீன பன்றிப் பண்ணை முறைகளை அமல்படுத்துவதற்கான செலவு மிகவும் அதிகம் என்றும், அது சிலாங்கூர் மாநிலத்தின் தேவையை மட்டும் பூர்த்தி செய்யும் நோக்கில் நடைமுறைசார்ந்ததாக இருக்காது என்றும் சுல்தான் தெரிவித்துள்ளார்.








