ஜோகூர்பாரு, சிட்டி சென்ட்ரல்-லில் பேருந்து ஓட்டுநருக்கும் ஒரு பெண் பயணிக்கும் இடையில் நடந்த தகராறு தொர்டபான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து அந்த பேருந்து ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த மே 2 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9.10 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண், அதே தினத்தன்று போலீசில் புகார் செய்துள்ளதாக ஜோகூர் பாரு செலாடன் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவுப் செலமட் தெரிவித்தார்.
இதற்கு முன்பு, தாம் மேற்கொண்ட பயணத்திற்கு பேருந்து கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி, அந்த பேருந்து ஓட்டுநர் தன்னிடம் தகராற்றில் ஈடுபட்டதாக 31 வயதுடைய பெண் தனது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார் என்று ஏசிபி ரவுப் செலமட் குறிப்பிட்டுள்ளார்.








