May 22, 2026
Thisaigal NewsYouTube
கெந்திங் ஹைலேண்ட்ஸ் மலை பகுதியில் சடலம் கண்டெடுக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

கெந்திங் ஹைலேண்ட்ஸ் மலை பகுதியில் சடலம் கண்டெடுக்கப்பட்டது

Share:

பென்த்தோங், ஏப்ரல் 15-

கெந்திங் ஹைலேண்ட்ஸ் சாலையின் 15.1 ஆவது கிலோமீட்டரில் உள்ள மலைப்பகுதியில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக, பென்த்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டெண்டென் சைஹாம் மோஹட் கஹார் உறுதிபடுத்தினார்.

நேற்று மாலை மணி 3.40 அளவில் பொதுமக்களிடமிருந்து கிடைக்க பெற்ற புகாரை தொடர்ந்து பகாங் போலீஸ் தடயவியல் பிரிவுடன் தனது தலைமையகத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சோதனைக்காக சென்றிருந்தனர்.

உயிரிழந்த நபரின் அடையாளம் காணப்படாத நிலையில், சவப் பரிசோதனைக்காக அவரின் உடல் தெங்க்கு அம்ப்புவான் அப்சான் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சைஹாம் மோஹட் தெரிவித்தார்.

சவப் பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் கிடைக்க பெறும்வரையில் இதுவொரு திடீர் மரணமே என்று வகைப்படுத்தப்பட்டிருப்பதாக சைஹாம் மோஹட் கூறினார்.

பாதிக்கப்பட்ட நபரை குறித்த தகவலறிந்தவர்கள் அருகாமையிலுள்ள போலீஸ் நிலையங்களில் தெரிவிக்கும்படியும் சைஹாம் மோஹட் கேட்டுக்கொண்டார்.

Related News

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி