கடந்த ஒரு வாரமாக தேடப்பட்டு வந்த பெரியவர் ஒருவரின் உடல் Hulu Selangor, Felda Soeharto நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ள ஒரு புதரில் கண்டெடுக்கப்பட்டது.
நேற்று காலை 10.15 மணியளவில் 57 வயதுடைய அப்பெரியவரின் உடல் அவர் ஓட்டி சென்ற Honda EX5 ரக மோட்டார் சைக்கிளுடன் சுயநினைவற்ற நிலையில் சம்பந்தப்பட்ட புதரில் காணப்பட்டதாக தெரியவந்துள்ளது.
முன்னதாக, Klang, Taman Sentosa - வில் உள்ள தனது வீட்டிலிருந்து கடைக்கு பொருள் வாங்க சென்ற பாதிக்கப்பட்ட அப்பெரியவர் மீண்டும் வீடு திரும்பாதது குறித்து அவரின் 29 வயது மகன் போலீசில் புகார் அளித்துள்ளதாக Hulu Selangor மாவட்ட துணை போலீஸ் தலைவர் Deputi Superintendan Mohd Asri Mohd Yunus கூறினார்.
பாதிக்கப்பட்ட அப்பெரியவர் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பது விசாரணையில் தெரிய வந்ததாக Mohd Asri இன்று அறிவித்தார்.








