Mar 18, 2026
Thisaigal NewsYouTube
கேபிள் திருடனுக்கு ஏற்பட்ட விபத்து
தற்போதைய செய்திகள்

கேபிள் திருடனுக்கு ஏற்பட்ட விபத்து

Share:

ஈப்போ, மார்ச் 15 -

தெலிகோம் மலேசியா நிறுவனத்திற்கு சொந்தமான லைன் கேபிளை திருடிய இரு நபர்கள் போலீசாரின் பிடியிலிருந்து தப்பிக்க முற்பட்ட போது சாலை விபத்தில் சிக்கி, ஒருவருக்கு எலும்பு முறிவுற்றது.

நேற்று அதிகாலை 5 மணியளவில் தாமான் மையாபிர், ஜாலான் பாசிர் மாஸ் சில் நடந்த இச்சம்பவத்தை குறித்து தனது தரப்புக்கு கிடைக்க பெற்ற புகாரை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்களை ரோந்து காரில் துரத்திச் செல்லும் பொழுது அக்கார் விபத்துக்குள்ளாகியதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி யாஹாயா ஹாசான் தெரிவித்தார்.

சந்தேகிக்கும் அந்நபர்கள் போரோத்தோன் ஈஸ்வாரா ரக காரில் தப்பிச் சென்ற போது இரண்டு ரோந்து கார்களில் போலீஸ் அதிகாரிகள் துரத்தி சென்றதாகவும் இறுதியில் அது விபத்தில் முடிவுற்றதாகவும் யாஹாயா ஹாசான் கூறினார்.

விபத்தில் காயமுற்ற 58 வயதுடைய ஆடவர் ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை