இன்று ஜூன் 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, தந்தையர் தினத்தை கொண்டாடப்படவிருக்கும் நாட்டிலுள்ள அனைத்து தந்தையர்களுக்கும் மாமன்னர் Sultan Ibrahim Sultan Iskandar மற்றும் பேரரசியார் Raja Zarith Sofiah தங்களின் தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
தமது குடும்பத்தின் நலனுக்காக அயராது உழைக்கும் அனைத்து தந்தையர்களின் வியர்வையும் தியாகத்தையும் மாண்புமிகு மாமன்னர் போற்றுவதாக தமது முகநூல் அகப்பக்கத்தின் வாயிலாக அவர் கூறியிருந்தார்.
பிள்ளைகளின் வாழ்கை தரத்தை சிறந்த முறையில் வழிவகுப்பதில் தந்தையர்களின் பொறுப்பு மற்றும் பங்களிப்பை ஒரு தந்தையாக தாம் நன்கு உணர்ந்திருப்பதாக மாமன்னர் Sultan Ibrahim வலியுறுத்தினார்.
ஒரு குடும்பத்தின் ஆலமரமாக இருப்பது மட்டுமின்றி, அவர்களின் பாதுகாவலராகவும் இருந்து சேவையாற்றும் ஒவ்வொரு தந்தையர்களின் தியாகமும் அளப்பரியது.
அவர்களின் தியாகத்தையும் சேவைகளையும் பாராட்டும் ஒரு நன்னாளாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.








