May 22, 2026
Thisaigal NewsYouTube
காணாமல் போன நபர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்
தற்போதைய செய்திகள்

காணாமல் போன நபர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்

Share:

பகாங், கோலா ரொம்பின் -னில் கடந்த மார்ச் 8 ஆம் தேதி காணாமல் போனதாக கூறப்பட்ட வேலையில்லா நபர் ஒருவர் மற்றொரு மாநிலத்தில் அமலாக்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜொகூரில் உள்ள அமலாக்க பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 38 வயது அந்நபரை குறித்து நேற்று ரொம்பின் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைக்க பெற்றதாக மாவட்ட போலீஸ் தலைவர் துணை கண்காணிப்பாளர் நோர் அஸ்மான் யூசோப் கூறினார்.

அந்நபர் பாதுகாப்பாகவும் உயிருடனும் இருப்பதுடன் போதைப்பொருள் வழக்கு விசாரணைக்கு உதவுவதற்கு அமலாக்க பிரிவினர் அவரை கைது செய்துள்ளதாக நோர் அஸ்மான் விவரித்தார்.

அவ்வாடவர் கைது செய்யப்படுவதற்கு என்ன காரணம் மற்றும் அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு ஜொகூர் சென்றாரா இல்லையா என்பது குறித்து தெளிவாக எதுவும் தெரியவில்லை என்று அந்நபரின் குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்ததாக நோர் அஸ்மான் குறிப்பிட்டார்.

Related News

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

29 மலேசியர்கள் உட்பட காசா மனிநேய செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிப்பு - இஸ்தான்புல் நகரை வந்தடைந்தனர்

29 மலேசியர்கள் உட்பட காசா மனிநேய செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிப்பு - இஸ்தான்புல் நகரை வந்தடைந்தனர்

ஜோகூரில் மாணவியிடம் பாலியல் சீண்டல் உள்ளூர் ஆடவர் கைது

ஜோகூரில் மாணவியிடம் பாலியல் சீண்டல் உள்ளூர் ஆடவர் கைது