Mar 19, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் அதிகளவில் உயிரிழந்தவர்கள் மோட்டார் சைக்கிளோட்டிகள்
தற்போதைய செய்திகள்

விபத்தில் அதிகளவில் உயிரிழந்தவர்கள் மோட்டார் சைக்கிளோட்டிகள்

Share:

அலோர் செடார், ஏப்ரல் 11 -

22024 ஆம் ஆண்டுக்கான் நோன்புப்பெருநாளையொட்டி அரச மலேசிய போலீஸ் படை தொடங்கிய 22 ஆவது ஓபி செலாமாட் அமலாக்க நடவடிக்கையில் நோன்புப்பெருநாள் முதல் நாளான ஷாவால் முதல் தேதியிலிருந்து இன்று மூன்றாவது நாள் வரையில் 1,289 சாலை விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறையின் இடைக்கால இயக்குநர் டத்துக் மொஹமாட் நஸ்ரி ஓமார் தெரிவித்தார்.

இச்சாலை விபத்துக்களில் 35 மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர்களே அதிகளவில் விபத்துக்குள்ளாகி, மரணச் சம்பவங்களை விளைவித்துள்ளன.

மொத்தம் 18 மோட்டார் சைக்கிளோட்டிகள் இந்த மூன்று நாட்களில் இறந்துள்ளனர் என்று டத்துக் மொஹமாட் நஸ்ரி குறிப்பிட்டுள்ளார்.

Related News