Jan 24, 2026
Thisaigal NewsYouTube
கடத்தப்பட்ட ஆடவர் பிணமாக மீட்பு, நால்வர் கைது
தற்போதைய செய்திகள்

கடத்தப்பட்ட ஆடவர் பிணமாக மீட்பு, நால்வர் கைது

Share:

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பூச்சோங், கம்போங் முஹிபா, பி.பி.ஆர் அடுக்குமாடி பொது குடியிருப்புப் பகுதியிலிருந்து கும்பல் ஒன்றினால் கடத்திச் செல்லப்பட்ட ஆடவர் ஒருவர், பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

26 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவரின் சடலம், நேற்று அதிகாலை 12.30 மணியளவில் பூச்சோங், 14 ஆவது மைல், ஒரு எண்ணெய் நிலையத்திற்கு அருகில் புரோத்தன் ஜென்2 ரக காரில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் அல்லாவுதீன் அப்துல் மஜித் தெரிவித்தார்.

அந்த ஆடவரின் உடல் செர்டாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சவப்பரிசோதனை நடத்தப்பட்டதில் உடலில் விலா எலும்பு முறிந்து இருப்பதுடன் தலையில் கடும் காயங்களுடன் விரிசல் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக அல்லாவுதீன் மேலும் கூறினார்.

சம்பந்தப்பட்ட ஆடவர், தனது சொந்த நண்பர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இதன் தொடர்பில் கிள்ளான் பள்ளத்தாக்குப்பகுதியில் 27 க்கும் 35 க்கும் இடைப்பட்ட வயதுடைய நான்கு நபர்களை போலீசார் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே குற்றப்பதிவுகளை கொண்டுள்ள இவர்கள், கைது செய்யப்படும் போதைப்பொருள் உட்கொண்டு இருப்பது தெரியவந்துள்ளது என்று அல்லாவுதீன் குறிப்பிட்டா்.

கும்பல் ஒன்று தனது மகனை கடத்திச் சென்றது தொடர்பில் அவரின் தந்தை கடந்த திங்கட்கிழமை அதிகாலை 5 மணியளவில் புக்கிட் ஜாலில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளதாக அல்லாவுதீன் தெரிவித்துள்ளார்.

Related News

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு