Jul 27, 2026
Thisaigal NewsYouTube
முறைகேடுகளைக் களைய அமலாக்க நிறுவனங்கள் நெருக்கமாக கண்காணிக்கப்படும்! பிரதமர் எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

முறைகேடுகளைக் களைய அமலாக்க நிறுவனங்கள் நெருக்கமாக கண்காணிக்கப்படும்! பிரதமர் எச்சரிக்கை

Share:

சுங்கத்துறை உறுப்பினர்கள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அம்பலமாகியுள்ள விவகாரத்தைத் தொடர்ந்து, குடிநுழைவுத்துறை, உள்நாட்டு வருமான வாரியம் முதலான நிறுவனங்கள் மிக நெருக்கமாக கண்காணிக்கப்படுமென பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவுறுத்தினார்.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களை நெருக்கமாக கண்காணிப்பதன் வழி, அதன் பொறுப்பற்ற தரப்பினரின் நடவடிக்கைகளை களைய முடியும். நிதியமைச்சகத்தின் கீழ் சுங்கத்துறை இருப்பதால் அதிலுள்ள உறுப்பினர்கள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது தமது மனதை நொறுங்கச் செய்வதாக, பிரதமர் கூறினார்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய கார்கோ-வில் 4.7 மில்லியன் வெள்ளி மதிப்பிலான கையூட்டைப் பெற்று சுமார் 34 சுங்கத்துறை உறுப்பினர்கள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கடந்த வாரம் அம்பலப்படுத்திருந்தது.

கடந்த 3 ஆண்டுகளில், அத்தரப்பினரின் அந்நடவடிக்கைகளால் நாட்டிற்கு 2 பில்லியன் வெள்ளி நிதி இழப்பு ஏற்பட்டிருப்பதாக, ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஜாம் பாக்கி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்