May 22, 2026
Thisaigal NewsYouTube
முறைகேடுகளைக் களைய அமலாக்க நிறுவனங்கள் நெருக்கமாக கண்காணிக்கப்படும்! பிரதமர் எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

முறைகேடுகளைக் களைய அமலாக்க நிறுவனங்கள் நெருக்கமாக கண்காணிக்கப்படும்! பிரதமர் எச்சரிக்கை

Share:

சுங்கத்துறை உறுப்பினர்கள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அம்பலமாகியுள்ள விவகாரத்தைத் தொடர்ந்து, குடிநுழைவுத்துறை, உள்நாட்டு வருமான வாரியம் முதலான நிறுவனங்கள் மிக நெருக்கமாக கண்காணிக்கப்படுமென பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவுறுத்தினார்.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களை நெருக்கமாக கண்காணிப்பதன் வழி, அதன் பொறுப்பற்ற தரப்பினரின் நடவடிக்கைகளை களைய முடியும். நிதியமைச்சகத்தின் கீழ் சுங்கத்துறை இருப்பதால் அதிலுள்ள உறுப்பினர்கள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது தமது மனதை நொறுங்கச் செய்வதாக, பிரதமர் கூறினார்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய கார்கோ-வில் 4.7 மில்லியன் வெள்ளி மதிப்பிலான கையூட்டைப் பெற்று சுமார் 34 சுங்கத்துறை உறுப்பினர்கள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கடந்த வாரம் அம்பலப்படுத்திருந்தது.

கடந்த 3 ஆண்டுகளில், அத்தரப்பினரின் அந்நடவடிக்கைகளால் நாட்டிற்கு 2 பில்லியன் வெள்ளி நிதி இழப்பு ஏற்பட்டிருப்பதாக, ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அஜாம் பாக்கி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு