சிலாங்கூர், சபாக் பெர்னாமில் உள்ள ஒரு இடைநிலைப் பள்ளியின் 15 வயதுடைய ஆறு மாணவிகளுக்கு எதிராகப் பள்ளி வகுப்பறை, கார் உள்ளிட்ட இடங்களில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக 45 வயதான இசை ஆசிரியர் ஒருவர் கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
இடி ஜோஹான் முகமட் ஜோஹ்தி என்ற அந்த இசை ஆசிரியர் மீது 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. நீதிபதி ஷரீஃபா ஹாசிந்தி சையத் ஒமர் முன்னிலையில் இக்குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட போது, அவற்றை மறுத்து அந்த ஆசிரியர் விசாரணை கோரினார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் சிறைத் தண்டனை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் 2017ஆம் ஆண்டு குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த இசை ஆசிரியர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
கடந்த 2025 ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வரை சபா பெர்னம் வட்டாரத்தில் ஒரு வீட்டிலும், காரிலும் அந்த ஆசிரியர் இக்குற்றங்களை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.








