கோலகுபு பாருவில் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் இந்திய வாக்காளர்களை சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சந்திக்க வேண்டும் என்று டிஏபி யைச் சேர்ந்த முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சாண்டியாகோ முன்வைத்த பரிந்துரையை தொடர்ந்து அப்படியொரு சந்திப்பை மந்திரி பெசார் நடத்துவதற்கான அறிகுறிகள் எதுவும் இதுவரையில் தென்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொகுதியில் உள்ள மக்கள் பிரச்னையை கண்டறிவதற்கு மந்திரி பெசார், ஒரு சந்திப்பை இந்தியர்களுடன் நடத்த வேண்டும் என்று கடந்த மே 3 ஆம் தேதி பத்திரிகை வாயிலாக தாம் அறிவித்த போதிலும் அதற்கான அறிகுறிககள் இதுவரையில் இல்லை என்று சார்லஸ் சாண்டியாகோ குறிப்பிட்டார்.
எனினும் இந்த இடைத் தேர்தலில் இந்திய வாக்காளர்கள் மிக முக்கியம் என்ற போதிலும் இச்சந்திப்பு தொடர்பாக மேல் விவரங்கள் எதனையும் விவரிக்க சார்லஸ் சாண்டியாகோ மறுத்து விட்டார்.








