May 4, 2026
Thisaigal NewsYouTube
1.1 பில்லியன் வழக்கு விசாரணை: எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்திற்கு ரபிசி வருகை
தற்போதைய செய்திகள்

1.1 பில்லியன் வழக்கு விசாரணை: எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்திற்கு ரபிசி வருகை

Share:

முன்னாள் பொருளாதார அமைச்சரான ரஃபிசி ரம்லி, தன் மீதான வழக்கு விசாரணையில் வாக்குமூலம் அளிப்பதற்காக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் தலைமையகத்தில், இன்று காலை ஆஜரானார்.

அதிகார துஷ்பிரயோகம் மற்றும் 1.1 பில்லியன் ரிங்கிட் முதலீட்டு முறைகேடு குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக அவர் தமது வாக்குமூலத்தை வழங்க வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அமைச்சிற்கும், இங்கிலாந்தைச் சேர்ந்த ஆர்ம் லிமிடெட். நிறுவனத்திற்கும் இடையே செய்யப்பட்ட ஒப்பந்தம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஆர்.எம் முன்னதாக தெரிவித்திருந்தது.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய ரபிசி, தன்னிடம் மறைக்க எதுவும் இல்லை என்றும், இவ்வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றாலும் எதிர்க்கொள்ளத் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

Related News